பீஜிங்: கொரோனா பாதிப்பு நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி வருகிறது. நமது கை குலுக்கும் விதம் துவங்கி நமது பிள்ளைகள் பள்ளி செல்லும் போக்கு வரை அனைத்தும் மாறிவிட்டன.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கதறினாலும் சினிமா ஸ்டார்கள் கைகூப்பி வேண்டுகோள் வைத்தாலும் மருந்துவர்கள் நாளுக்கு நாள் போராடினாலும் கொரோனா தன் கோர முகத்தை காட்டியபடியே உள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் விலங்கு இறைச்சி மூலம் பரவத் துவங்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் உயிரை பலி வாங்கியது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சீனா பல அதிநவீன வழிமுறைகளைக் கையாண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து சீனாவை விடுவித்தது.
இதில் சீனா கையாண்ட முக்கியமான தொழில்நுட்ப கருவி ட்ரோன். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்துகள் தெளிக்க முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் காட்டியது. இதனால் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை எவ்வாறு சாத்தியப்பட்டது எனப் பார்ப்போமா
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ட்ரோன்களை சீனா பயன்படுத்தியது எப்படி